Posts

Showing posts from 2019

கண்ணனால் பாட்டு பிறந்தது

பாரதி போன்றவர்கள்  இந்த உலகில் வந்து சென்றபின் என்போன்றோரும் கவிதை என்ற பேரில்  கண்றாவிகளை இணையதளங்களில் இட்டு உங்களை வேதனைபடுத்திட இன்றும் உலவுகின்றனர்.  :-).  போனால் போகிறதென்று நீங்களும் கிளிக் செய்து துர்வசத்தினால் வந்தடைந்து விட்டீர்.  படித்து விட்டு போவதில் இன்னும் பாவம் சேரப்போவதில்லை. காலை அலுவலகப்பயணம். சாலைகளில் நெரிசல். ஒன்றும் புதிதல்ல. கன்னடத்தில் ஆல்-இந்திய-வானொலியில் கிராமியப்பாடல். வேறு என்ன செய்வதென்று தவித்த வேளையில், தோன்றிய வார்த்தைகள்.  பல காலமாக கேட்டனுபவிட்ட பஜனைகளின் உள்தாக்கம் ! முதலில் முதல் வரி கண்ணா வா கண்ணா வா, கண்ணே ஓடி வா !! கண்டிப்பாக இரண்டாம் வரி  எதுகையுடன் இருக்க வேண்டாமா?  அப்போ, கண்டிப்பாக  எண் , பெண்  போன்ற வார்த்தைகள் தான் அமைக்க வேண்டும். ஹ்ம்ம் ... இரண்டாம் வரி இப்படி கண்மணியே  கண்ணா கண்ணா ஓடி வா !! ஹ்ம்ம் தாளத்தில்  உட்காரவில்லை இன்னும் இரண்டு மூன்று பதங்கள் தேவை.! கண்ணின் மணியே கண்ணே நீ கண்ணா ஓடிவா  அட. பரவாயில்லையே! வாகனம் நாடு ரோட்டில், ஜன்னல்கள் அடைக்கப் பட்டி...

பொங்கலோ பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்!  வெங்கலத்தினாலேயே   ஆயிருந்தபோதிலும்  விண்கலத்தை அடைந்ததென்ற இன்பம்தரும்  பொங்கலோ பொங்கல்!  மண்கலத்தில்  வெல்லச்சோறு வெந்திருந்தபோதிலும்  செம்பொன்கலத்தில்  பெற்றதென்ற மாறுதரும்  பொங்கலோ பொங்கல்!  மஞ்சளிட்ட  மங்கையர்தன் , மன்னவர்தம் கரம்பிடித்து  சூரியர்தம்  கதிர் கண்டு,  போரடித்த கதிர் கொண்டுதரும்  பொங்கலோ பொங்கல்!  அரும்புமீசை ஆண்களும், குறும்புமிக்க  பெண்களும்  விரும்பியேகி. இன்றுமட்டும்,  கரும்பு தின்னும்  அழகைத்தரும்  பொங்கலோ பொங்கல்!  காலையெல்லாம் களித்திருந்தும்,  மதியம் ஒரு பெருவிருந்தும்,  மாலை சாயும்  வேளையிலே, வாழ்த்து சொல்லும்  இங்கே ஒரு கவி-தைப்-பொங்கலோ பொங்கல்! -- சின்னப்பயல் சீனன்