Posts

கவிதை பிறந்த கதை - சிசேரியன் முறையா சுகப்ரசவமா ?

கவிதைகள் எப்படி பிறக்கின்றன ? தெரியவில்லை . என் அனுபவத்தில்இன்னொரு  முறை கவிதை ஒன்று பிறந்தது. அதன் பிறப்பு அறுத்தெடுத்ததா  அல்லது சுகமா என்று அறிய வேண்டும். மனதிலே வார்த்தைகள் கோர்வையாக தானே வரும் பொழுது அவற்றை உடனடியாக அரவணைத்து, கொஞ்சம் மெருகேற்றி, எழுதி விடவேண்டும். அவ்வளவு தான் கவிதை. கோப்பாக இருக்கின்றதா, கவி இலக்கணத்துக்கு உட்ப்பட்டுள்ளதா என்றெல்லாம் பார்க்க முடியாது கவிதைக்கு இலக்கணமுண்டோ? அறிந்தவர் கூறலாம்.. மீண்டும் அந்த உத்வேகம் என்று பிறக்கும் என்று தெரியாது.  எழுதி விடவேண்டும்.  அம்மாதிரி  ஒரு நாள் ஒரு கவிதை உருவானது  .. அதன் கதை.. ஆடிக்கு  ஒரு முறையும் அமாவாசைக்கு ஒரு முறையும் என்றால் கூட பரவாயில்லை, இங்கே ஒரு யுகத்துக்கு ஓரு  பதிவு - .. போனால் போகட்டும் -- செய்ய வேண்டியது தான் ... நன்றாக இருப்பது போல் இருக்கு,  போட்டு தான் பார்ப்போமே என்று இங்கேயே கதையுடன்  கூடிய கவிதை. கவிதை உருவான கதை  முதல் வரி .. இப்போ படு சீக்கிரமா ஒரு கவிதை எழுத முடியுமா என்ற எண்ணம் முதலில். எப்போதும் ப...

கண்ணனால் பாட்டு பிறந்தது

பாரதி போன்றவர்கள்  இந்த உலகில் வந்து சென்றபின் என்போன்றோரும் கவிதை என்ற பேரில்  கண்றாவிகளை இணையதளங்களில் இட்டு உங்களை வேதனைபடுத்திட இன்றும் உலவுகின்றனர்.  :-).  போனால் போகிறதென்று நீங்களும் கிளிக் செய்து துர்வசத்தினால் வந்தடைந்து விட்டீர்.  படித்து விட்டு போவதில் இன்னும் பாவம் சேரப்போவதில்லை. காலை அலுவலகப்பயணம். சாலைகளில் நெரிசல். ஒன்றும் புதிதல்ல. கன்னடத்தில் ஆல்-இந்திய-வானொலியில் கிராமியப்பாடல். வேறு என்ன செய்வதென்று தவித்த வேளையில், தோன்றிய வார்த்தைகள்.  பல காலமாக கேட்டனுபவிட்ட பஜனைகளின் உள்தாக்கம் ! முதலில் முதல் வரி கண்ணா வா கண்ணா வா, கண்ணே ஓடி வா !! கண்டிப்பாக இரண்டாம் வரி  எதுகையுடன் இருக்க வேண்டாமா?  அப்போ, கண்டிப்பாக  எண் , பெண்  போன்ற வார்த்தைகள் தான் அமைக்க வேண்டும். ஹ்ம்ம் ... இரண்டாம் வரி இப்படி கண்மணியே  கண்ணா கண்ணா ஓடி வா !! ஹ்ம்ம் தாளத்தில்  உட்காரவில்லை இன்னும் இரண்டு மூன்று பதங்கள் தேவை.! கண்ணின் மணியே கண்ணே நீ கண்ணா ஓடிவா  அட. பரவாயில்லையே! வாகனம் நாடு ரோட்டில், ஜன்னல்கள் அடைக்கப் பட்டி...

பொங்கலோ பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்!  வெங்கலத்தினாலேயே   ஆயிருந்தபோதிலும்  விண்கலத்தை அடைந்ததென்ற இன்பம்தரும்  பொங்கலோ பொங்கல்!  மண்கலத்தில்  வெல்லச்சோறு வெந்திருந்தபோதிலும்  செம்பொன்கலத்தில்  பெற்றதென்ற மாறுதரும்  பொங்கலோ பொங்கல்!  மஞ்சளிட்ட  மங்கையர்தன் , மன்னவர்தம் கரம்பிடித்து  சூரியர்தம்  கதிர் கண்டு,  போரடித்த கதிர் கொண்டுதரும்  பொங்கலோ பொங்கல்!  அரும்புமீசை ஆண்களும், குறும்புமிக்க  பெண்களும்  விரும்பியேகி. இன்றுமட்டும்,  கரும்பு தின்னும்  அழகைத்தரும்  பொங்கலோ பொங்கல்!  காலையெல்லாம் களித்திருந்தும்,  மதியம் ஒரு பெருவிருந்தும்,  மாலை சாயும்  வேளையிலே, வாழ்த்து சொல்லும்  இங்கே ஒரு கவி-தைப்-பொங்கலோ பொங்கல்! -- சின்னப்பயல் சீனன்

மொக்கை மேட்டர் - தமிழ்ப்பேச்சா தமிழ்போச்சா ?

. உலகெங்கும் உள்ள 8 கோடி தமிழ் நண்பர்கள் அனைவருக்கும், என் இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!  ஆமாம் தமிழ் நாட்டில் மட்டும் சுமார்  ஆறரை கோடி தமிழ்  மக்களாம்!. மற்ற இடங்களிலெல்லாம் சேர்த்து இன்னொரு ஒன்றரை  கோடி மக்கள்.  அம்மாடியோவ் !  இப்படிப்பட்ட தமிழ் மக்களின்  தமிழ் நாட்டில் புத்தாண்டு தினம் நிறைவடைகின்ற  வேளையில் ஒரு சிறு எழுத்து | இந்த புத்தாண்டில், தமிழர்கள் நாம் யாவரும், பிறதமிழருடனும், அவரவர்கள் வீட்டிலும், குழந்தைகளுடனும்  தமிழிலேயே பேசவேண்டும் என்பது சிறிய வேண்டுகோள். (முடிந்தவரையில் என்று எழுத எத்தனித்து அதை எறிந்துவிட்டேன், நம்மால் முடியும் என்றெண்ணி!) ---  நம்  செம்மொழி தமிழ்மொழி நாட்டவர் வீட்டவர்  வழக்கிலிருந்து விலகிவிடாமலிருக்க  நம்மால் இயன்ற ஒரு பேருதவியாக இருக்கும். இப்போதிருக்கும் நிலைமையில், முக்கியமாக பெருநகர்வாழ் மக்களான நாம்,  நம் ஆங்கிலவசப்பட்ட பிள்ளைகளுடனும்   பேரப்பேத்திமார்களோடு  வீட்டிலே பேசும்போது கூட, கூடியசீக்கிரமே குடும்பங்களில் தமிழ் ஓய்ந்து விடுமோ என்ற ...

ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண ....

Image
 ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண .... கவிதை நாமும் எழுதவோமென்று முக்கிமுயன்று ...  வாட்ஸாப்பில் நாலைந்து வரிகளெழுதிய தைரியத்தில் - இதோ இன்னொன்று ! மும்மூன்று கோடுகள் முறையாய் அணிந்தும் முக்கண் முதல்வனை முழுமையாக நினைந்தும் முக்கூடலிலும் மும்முறை மூழ்கி எழுந்தும் முத்துமாலையம்மனை முயன்றங்கு தரிசித்தும் தேடி தேடி தேவாலயங்கள் பல தாண்டியும் நாடி நாடி நமச்சிவாயவென்று நலத்திற்காகவே நமஸ்கரித்தும் கேள் கேள் என்று கேளாதவை எல்லாம் கேட்டென்ன ? சேர் சேர் என்று சேராதசெல்வம் சேர்த்தென்ன ? மகாதேவா! என்று மந்திரங்கள் முணுமுணுத்தென்ன ? பரமேஸ்வரா என்று பத்தியங்கள் பலவிருந்தென்ன ? பாரிலே பார்த்த பற்பல பஜனைகளில் பங்கெடுத்தென்ன ? பிறவிப்பயனறியாமல் பாசுரங்கள் மட்டுமே பாடியென்ன ? மானுடராய் பிறந்தவர்க்கு மட்டுமே மறக்காமல் அளித்த மனித நேயத்தை மருந்து போலாயினும் மகேஸ்வரா நீ எக்கணமும் அருந்தியறிந்திடவும் அறிந்டருந்திடவும் அக்கணமே  அருள் செய்வாய் அண்ணாமலையானே! இப்பூவுலகில் ஐம்புலனாலும் பொழுதென்றும் புரிகின்ற ஏனையபல புண்ணியத்தாலேயன்றி மண்ணுலகை மறந்தே சந்திரசூடனின் சரணத்தில் விண்ணுலகிலேயே வீ...

அடக்கியதும் அடங்கியதும்

Image
 அடக்கியதும் அடங்கியதும் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து பல சந்திப்புகளுக்குப்  பிறகு இரவில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் ... ஆம் அது  நிகழ்ந்தது - இவ்வாறு நடந்ததேயில்லை - அடக்கமுடியாத நிலைமை - எந்த நிமிஷமும் இதோ பீறிட்டுக்கொண்டு வந்துவிடும் என்று தோன்றியது - வாகனம் செலுத்தும்போதே செய்துவிடலாமா என்றெண்ணினேன்- மனைவி தூங்கியிருக்கமாட்டாள் - வீடு சீக்கிரம் சென்றடைய வேண்டும்  - கவனம் கலைந்துவிட்டால் என்ன செய்வதென்று தவித்தேன் சிறிது - ரோட்டிலேயே காரை   நிறுத்தி சாந்த படுத்திக்கொள்ளலாமா என்றெண்ணினேன் - மற்றவர் பார்க்க  பார்க்க  செய்ய தைரியமும் இல்லை -  காரில் குளிர் சாதனம் வேறு வேலை செய்யாததனால் ஜன்னல்களை வேறு திறந்துவைத்திருந்தேன் - இது சௌகரியமோ?  மற்றவர் கவனித்து விட்டால் என்ன செய்வது? பரவாயில்லை இரவு நேரம் தானே - நள்ளிரவிற்கு வெகு தூரமில்லை - தவிர இது என் வாகனம் - இங்கிருந்து நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ... முடிவு செய்து மற்றவர்களை பற்றி கவலையில்லாமல் - லாவகமாக முனைந்தேன் .... நிஜம்தான்  செய்தேவிட்டேன் - நம்பமாடீர்கள்...

வா சித்திரகுப்தா, வா! - (அர்த்தமற்ற அட்டகாசம்)

Image
ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனைவி ரொம்ப படுத்திய பின்னர் ஒரு வியாழன் இரவு - சின்ன பயல்கள் நடிக்க வேண்டும் என்று ஒரு சிறிய நாடகம் எழுதினோம். நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் பொங்கல் கலை விழாவில் மேடை ஏறியது இந்த நாடகம். நல்ல சில பின்னூட்டங்கள் வந்ததினால் இதை இந்த வலைபதிவில் பதிக்கிறேன். கதை எழுதியது இரண்டு மணி நேரம்.. ப்ராக்டிஸ் பண்ண வைத்தது பற்பல மணி நேரம் - மூணு வால்-சை வைத்து .. யம்மா பெண்டு கழண்டு விட்டது .. குறிப்பு:- இந்த நாடகத்தில்/கதையில் வரும் நிகழ்ச்சிகள் மற்றும் கதா பத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. தயவுசெய்து நகைச்சுவை கண்ணோட்டத்துடன் மட்டும் படித்து ரசிக்கவும். யாரையும் அல்லது எந்த நம்பிக்கைகளையும் புண் படுத்துவது நோக்கம் இல்லை.படித்து ரசியுங்கள். -------------------------------------------------------------------------------- ஜனவரி 15 2010. பதிப்பு 0.3. காப்புரிமை:-  தேவி-வீட்டான்  (kutti at hotmail dot com) Copyright (C) 2010  தேவி-வீட்டான்  (kutti at hotmail dot com) This work is licensed under http://creativecommons.org/licenses/by-...