கவிதை பிறந்த கதை - சிசேரியன் முறையா சுகப்ரசவமா ?
கவிதைகள் எப்படி பிறக்கின்றன ? தெரியவில்லை . என் அனுபவத்தில்இன்னொரு முறை கவிதை ஒன்று பிறந்தது. அதன் பிறப்பு அறுத்தெடுத்ததா அல்லது சுகமா என்று அறிய வேண்டும். மனதிலே வார்த்தைகள் கோர்வையாக தானே வரும் பொழுது அவற்றை உடனடியாக அரவணைத்து, கொஞ்சம் மெருகேற்றி, எழுதி விடவேண்டும். அவ்வளவு தான் கவிதை. கோப்பாக இருக்கின்றதா, கவி இலக்கணத்துக்கு உட்ப்பட்டுள்ளதா என்றெல்லாம் பார்க்க முடியாது கவிதைக்கு இலக்கணமுண்டோ? அறிந்தவர் கூறலாம்.. மீண்டும் அந்த உத்வேகம் என்று பிறக்கும் என்று தெரியாது. எழுதி விடவேண்டும். அம்மாதிரி ஒரு நாள் ஒரு கவிதை உருவானது .. அதன் கதை.. ஆடிக்கு ஒரு முறையும் அமாவாசைக்கு ஒரு முறையும் என்றால் கூட பரவாயில்லை, இங்கே ஒரு யுகத்துக்கு ஓரு பதிவு - .. போனால் போகட்டும் -- செய்ய வேண்டியது தான் ... நன்றாக இருப்பது போல் இருக்கு, போட்டு தான் பார்ப்போமே என்று இங்கேயே கதையுடன் கூடிய கவிதை. கவிதை உருவான கதை முதல் வரி .. இப்போ படு சீக்கிரமா ஒரு கவிதை எழுத முடியுமா என்ற எண்ணம் முதலில். எப்போதும் ப...